முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 373. நின்னோர் அன்னோர் இலரே!
புறநானூறு - 373. நின்னோர் அன்னோர் இலரே!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை.
துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.,
உருமிசை முழக்கென முரசும் இசைப்பச், செருநவில் வேழம் கொண்மூ ஆகத், தேர்மா அழிதுளி தலைஇ , நாம் உறக் கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை, இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் |
5 |
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப, |
10 |
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து, |
15 |
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர் அம்பழி பொழுதில் தமர்முகம் காணா, . . . . . . . . . ற்றொக்கான வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு, |
20 |
உரும் எறி மலையின், இருநிலம் சேரச், சென்றோன் மன்ற சொ . . . . . . . . . ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப, வஞ்சி முற்றம் வயக்கள னாக, அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் |
25 |
கொண்டனை பெரும! குடபுலத்து அதரி; பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்! விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்ற, புகர்முக முகவை பொலிக! என்றி ஏத்திக், கொண்டனர் என்ப பெரியோர் : யானும் |
30 |
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற, . . . . . லெனாயினுங் காதலின் ஏத்தி நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின், மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும! பகைவர் புகழ்ந்த அண்மை, நகைவர்க்குத் |
35 |
தாவின்று உதவும் பண்பின், பேயொடு கணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ, அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 371 | 372 | 373 | 374 | 375 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 373. நின்னோர் அன்னோர் இலரே!, நின்னோர், கொங்கு, இலக்கியங்கள், அன்னோர், புறநானூறு, கருவூர், இலரே, வேந்தே, கண்ட, வெற்றி, என்கின்றனர், வஞ்சிமுற்றம், இதன், இப்படி, இன்மையின், சங்க, எட்டுத்தொகை, மகளிர், பெரும, பொலிக, அதரி, பெரியோர்