முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 371. பொருநனின் வறுமை!
புறநானூறு - 371. பொருநனின் வறுமை!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: மறக்களவழி.
போதவிழ் அலரி நாரின் தொடுத்துத், |
5 |
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன், அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக், கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப, வருகணை வாளி . . . . . அன்பின்று தலைஇ, இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
10 |
வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக், குறைத்தலைப் படுபிணன் எதிரப், போர்பு அழித்து யானை எருத்தின் வாள்மட லோச்சி அதரி திரித்த ஆள் உகு கடாவின், மதியத் தன்ன என் விசியுறு தடாரி |
15 |
அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின், பணைமருள் நெடுந்தாள், பல்பிணர்த் தடக்கைப், புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும! களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி, விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள், |
20 |
குடர்த்தலை மாலை சூடி, உணத்தின ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர், பல என, உருகெழு பேய்மகள் அயரக், குருதித்துக ளாடிய களம்கிழ வோயே! |
25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 369 | 370 | 371 | 372 | 373 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 371. பொருநனின் வறுமை!, வந்துள்ளேன், இலக்கியங்கள், புறநானூறு, வறுமை, பொருநனின், வாழ்த்துகிறாள், வாள், செய்கிறாய், தடக்கைப், பெறலாம், அரிசி, எட்டுத்தொகை, சங்க, தொடுத்துத், யானை, பல்பிணர்த்