முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 368. பாடி வந்தது இதற்கோ?
புறநானூறு - 368. பாடி வந்தது இதற்கோ?
பாடியவர்: கழாத் தலையார்
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
திணை: வாகை
துறை: மறக்களவழி
குறிப்பு: இவன், சோழன் வேற்பறடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது , களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா, முன்னர் அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள்.
களிறு முகந்து பெயர்குவம் எனினே. ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக், கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன; கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே; கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி |
5 |
நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே; கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே, மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி, வளிவழக் கறுத்த வங்கம் போலக் குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க |
10 |
முகவை இன்மையின் உகவை இன்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து, ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ ! கடாஅ யானைக் கால்வழி யன்னவென் தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப், |
15 |
பாடி வந்த தெல்லாம், கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்தநின் அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 366 | 367 | 368 | 369 | 370 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 368. பாடி வந்தது இதற்கோ?, பாடி, புலவர், பெறலாம், இலக்கியங்கள், எனினே, பரிசாகப், போர்க்களம், என்றால், கழுத்தில், முகக்குவம், இதற்கோ, வந்தது, புறநானூறு, எட்டுத்தொகை, கிடக்கின்றன, உன்னைப், தொங்கும், வந்துள்ளேன், இந்தப், சங்க, போலக், குன்றம், சோழன், குடக்கோ, இரப்போர், பாடிக்கொண்டு, போர், ஆரம், அவன்