முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 353. 'யார் மகள்?' என்போய்!
புறநானூறு - 353. 'யார் மகள்?' என்போய்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
திணை: காஞ்சி
துறை: மகட்பாற் காஞ்சி
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல், ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத், தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித், தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, |
5 |
வினவல் ஆனா வெல்போர் அண்ணல்! யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்; குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத் |
10 |
தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு . . . . . . . . . . . . . . . . . உழக்குக் குருதி ஓட்டிக், கதுவாய் போகிய நுதிவாய் எகமொடு, |
15 |
பஞ்சியும் களையாப் புண்ணர். அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 351 | 352 | 353 | 354 | 355 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 353. 'யார் மகள்?' என்போய்!, மகள், யார், இலக்கியங்கள், என்போய், புறநானூறு, மன்னன், தொல்குடி, வந்த, கேள், காஞ்சி, எட்டுத்தொகை, சங்க, கம்மியன்