முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 331. இல்லது படைக்க வல்லன்!
புறநானூறு - 331. இல்லது படைக்க வல்லன்!
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்).
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப், புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும் கல்லா இடையன் போலக், குறிப்பின் |
5 |
இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளது தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள், நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில் வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் |
10 |
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 329 | 330 | 331 | 332 | 333 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 331. இல்லது படைக்க வல்லன்!, வல்லன், இல்லது, வல்லவன், இலக்கியங்கள், ஆயினும், புறநானூறு, தன்னிடம், படைக்கவும், படைக்க, இல்லாத, மிகவும், கிணறு, உணவு, கூவல், சங்க, எட்டுத்தொகை, கல்வி, உறையூர், இடையன், உள்ளது