புறநானூறு - 328. ஈயத் தொலைந்தன!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை
துறை :மூதின் முல்லை
.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த புன்புலச் சீறூர், நெல்விளை யாதே; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; .. .. .. .. .. .. டமைந் தனனே; |
5 |
அன்னன் ஆயினும், பாண ! நன்றும் வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட.. .. களவுப் புளியன்ன விளை.. .. .. .. .. .. .. வாடூன் கொழுங்குறை கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், |
10 |
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு உண்டு, இனி திருந்த பின். .. .. .. .. .. .. தருகுவன் மாதோ- தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை முயல்வந்து கறிக்கும் முன்றில், |
15 |
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 326 | 327 | 328 | 329 | 330 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 328. ஈயத் தொலைந்தன!, அவன், ஈயத், இலக்கியங்கள், தொலைந்தன, புறநானூறு, பானையில், சிற்றூர், கறிக்கும், முஞ்ஞை, சங்க, சீறூர், எட்டுத்தொகை