முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
புறநானூறு - 326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச், சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், |
5 |
கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் அருமிளை இருக்கை யதுவே -மனைவியும், வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது, படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை |
10 |
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 324 | 325 | 326 | 327 | 328 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 326. பருத்திப் பெண்டின் சிறு தீ!, பருத்திப், அந்த, வல்லாளன், இலக்கியங்கள், பெண்டின், சிறு, புறநானூறு, உடையது, பார்த்ததும், இருந்த, சங்க, எட்டுத்தொகை, பெண்