முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 307. யாண்டுளன் கொல்லோ!
புறநானூறு - 307. யாண்டுளன் கொல்லோ!
பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை
துறை : களிற்றுடனிலை
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; வேனல் வரி அணில் வாலத்து அன்ன; கான ஊகின் கழன்றுகு முதுவீ |
5 |
அரியல் வான்குழல் சுரியல் தங்க, நீரும் புல்லும் ஈயாது உமணர் யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர் பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, |
10 |
வெஞ்சின யானை வேந்தனும், இக்களத்து எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப், பண் கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 305 | 306 | 307 | 308 | 309 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 307. யாண்டுளன் கொல்லோ!, யாண்டுளன், கொல்லோ, இலக்கியங்கள், வம்பலர், புறநானூறு, முடிவெடுத்தான், பகைவர், உயிர், தாக்குதலில், எங்கு, உள்ளானோ, போர்க்களத்தில், இப்போது, தலைவன், செல்வர், தோன்றும், அன்ன, சங்க, எட்டுத்தொகை, வேனல், நீரும், அப்போது, உமணர், புல்லும், எருது