புறநானூறு - 297. தண்ணடை பெறுதல்!
பாடினோர் பாடப்பட்டோன் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வெட்சி
துறை: இண்டாட்டு
பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக், கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க் கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி |
5 |
நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித், துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின், மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 295 | 296 | 297 | 298 | 299 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 297. தண்ணடை பெறுதல்!, தண்ணடை, இலக்கியங்கள், இப்போது, புறநானூறு, பெறுதல், நிற்கிறான், மரையா, இவனுக்கு, வாழும், நிலம், கம்புள், சங்க, எட்டுத்தொகை, எருமை, துஞ்சும், சீறூர், கிடக்கும்