முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 29. நண்பின் பண்பினன் ஆகுக!
புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.
அழல் புரிந்த அடர் தாமரை ஐது அடர்ந்ற நூற் பெய்து, புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப், பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! |
5 |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக், கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும், ஒடியா முறையின் மடிவிலை யாகி |
10 |
நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்! நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர் ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு, வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் |
15 |
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள் பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக், கூவை துற்ற நாற்கால் பந்தர்ச், சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
20 |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின் கோடியர் நீர்மை போல முறை முறை ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய நகைப் புறனாக, நின் சுற்றம்! |
25 |
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!, நின், இலக்கியங்கள், பக்கம், நண்பின், சுற்றம், ஆகுக, புறநானூறு, பண்பினன், முறை, செய்தால், மகிழும், செய்கை, திளைக்கட்டும், முற்றுகையில், தோள், சங்க, எட்டுத்தொகை, மயிர், பாண், முரசு, முற்றுக, தீமையும்