புறநானூறு - 289. ஆயும் உழவன்!
பாடியவர்: கழாத்தலையார்.
திணை, துறை. தெரிந்தில.
ஈரச் செவ்வி உதவின ஆயினும், பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி, வீறுவீறு ஆயும் உழவன் போலப், பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய மூதி லாளர் உள்ளும், காதலின் |
5 |
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை, இவற்கு ஈக ! என்னும்; அதுவும்அன் றிசினே; கேட்டியோ வாழி_பாண! பாசறைப், பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 287 | 288 | 289 | 290 | 291 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 289. ஆயும் உழவன்!, ஆயும், இலக்கியங்கள், உழவன், புறநானூறு, பூக்கோள், இவனுக்கே, கொடுங்கள்”, நாள், இன்று, எட்டுத்தொகை, சங்க