முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 270. ஆண்மையோன் திறன்!
புறநானூறு - 270. ஆண்மையோன் திறன்!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: கரந்தை
துறை: கையறுநிலை
பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின், இனம்சால் யானை, நிலந்தவ உருட்டிய நேமி யோரும் சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே- நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் |
5 |
சிறுவர் தாயே! பேரிற் பெண்டே! நோகோ யானே ; நோக்குமதி நீயே; மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரும் மறவர் வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார், |
10 |
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை. விழுநவி பாய்ந்த மரத்தின், வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 268 | 269 | 270 | 271 | 272 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 270. ஆண்மையோன் திறன்!, இலக்கியங்கள், ஆண்மையோன், புறநானூறு, திறன், வருந்துகிறேன், நான், வானம், இடத்தில், பாய்ந்த, பார், யானை, எட்டுத்தொகை, சங்க, இமைக்கும், சமங்கண், தாயே