முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 266. அறிவுகெட நின்ற வறுமை!
புறநானூறு - 266. அறிவுகெட நின்ற வறுமை!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை
பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக், கயங்களி முளியும் கோடை ஆயினும், புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம் |
5 |
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்! வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி! சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், ஆசாகு என்னும் பூசல்போல, வல்லே களைமதி அத்தை- உள்ளிய |
10 |
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப், பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன் அறிவுகெட நின்ற நல்கூர் மையே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 264 | 265 | 266 | 267 | 268 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 266. அறிவுகெட நின்ற வறுமை!, வறுமை, அறிவுகெட, நின்ற, இலக்கியங்கள், புறநானூறு, எப்படிப்பட்ட, என்கிறார், நீர்வளம், போக்கவேண்டும், அவர், உடம்பில், உடனே, ஆம்பல், சங்க, எட்டுத்தொகை, சென்னி, பெய்யாது, வயமான், திருந்தா