முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 265. வென்றியும் நின்னோடு செலவே!
புறநானூறு - 265. வென்றியும் நின்னோடு செலவே!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
திணை: கரந்தை
துறை: கையறுநிலை
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை, ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப், பல்ஆன் கோவலர் படலை சூட்டக், கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்! |
5 |
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க் கடும்பகட்டு யானை வேந்தர் ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 263 | 264 | 265 | 266 | 267 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 265. வென்றியும் நின்னோடு செலவே!, செலவே, இலக்கியங்கள், வென்றியும், புறநானூறு, நின்னோடு, வழிபடும், சூட்டி, வேந்தரை, வைத்துத், வேங்கைப், பெற்று, கோவலர், எட்டுத்தொகை, சங்க, தொடுத்துப், கடுமான், அந்த