முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 249. சுளகிற் சீறிடம்!
புறநானூறு - 249. சுளகிற் சீறிடம்!
பாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக், கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர் அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச், பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு, |
5 |
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும், அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி, ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை, |
10 |
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள், மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 247 | 248 | 249 | 250 | 251 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 249. சுளகிற் சீறிடம்!, இலக்கியங்கள், சீறிடம், பிடித்து, புறநானூறு, சுளகிற், போல், இன்று, தரையில், கொண்ட, அன்ன, எட்டுத்தொகை, சங்க, வலைஞர், கூடி, உடைய