முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 246. பொய்கையும் தீயும் ஒன்றே!
புறநானூறு - 246. பொய்கையும் தீயும் ஒன்றே!
பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
திணை: பொதுவியல்
துறை: ஆனந்தப் பையுள்
பல்சான் றீரே ; பல்சான் றீரே செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே; துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, |
5 |
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; |
10 |
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 244 | 245 | 246 | 247 | 248 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 246. பொய்கையும் தீயும் ஒன்றே!, தீயும், பொய்கையும், இலக்கியங்கள், பல்சான், றீரே, புறநானூறு, ஒன்றே, ஈமத், நான், கணவன், பெருங்கோப்பெண்டு, எட்டுத்தொகை, சங்க