முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 239. இடுக, சுடுக, எதுவும் செய்க!
புறநானூறு - 239. இடுக, சுடுக, எதுவும் செய்க!
பாடியவர்: பேரெயின் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
தொடி யுடைய தோள் மணந்தணன் ; கடி காவிற் பூச் சூடினன் ; தண் கமழுஞ் சாந்து நீவினன் ; செற் றோரை வழி தபுத்தனன் ; நட் டோரை உயர்பு கூறினன் ; |
5 |
வலியரென, வழி மொழியலன் ; மெலியரென, மீக் கூறலன்; பிறரைத் தான் இரப் பறியலன் ; இரந் தோர்க்கு மறுப் பறியலன் ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; |
10 |
வருபடை எதிர் தாங்கினன் ; பெயர் படை புறங் கண்டனன் ; கடும் பரிய மாக் கடவினன் ; நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ; ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; |
15 |
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன்; மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்- இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! |
20 |
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 237 | 238 | 239 | 240 | 241 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 239. இடுக, சுடுக, எதுவும் செய்க!, இடுக, இலக்கியங்கள், சுடுக, எதுவும், செல்வான், செய்க, புறநானூறு, எதிர்த்து, செல்லும், செய்தான், பறியலன், எட்டுத்தொகை, சங்க, தெருவில், ஒன்றோ