புறநானூறு - 227. நயனில் கூற்றம்!
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
நனிபே தையே, நயனில் கூற்றம்! விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்; ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும், குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய, |
5 |
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின் வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல் நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண் வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி இனையோற் கொண்டனை ஆயின், |
10 |
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 225 | 226 | 227 | 228 | 229 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 227. நயனில் கூற்றம்!, நயனில், இவன், கூற்றம், இலக்கியங்கள், வளவன், புறநானூறு, உனக்கு, பசியைத், எப்படி, விளைச்சல், எட்டுத்தொகை, உனக்குத், சங்க