முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 214. நல்வினையே செய்வோம்!
புறநானூறு - 214. நல்வினையே செய்வோம்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
`செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; |
5 |
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின், செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின், மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; |
10 |
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே, |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 212 | 213 | 214 | 215 | 216 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 214. நல்வினையே செய்வோம்!, இலக்கியங்கள், நல்வினையே, செய்வோம், அதனால், புறநானூறு, மாறிப், கூடும், உலகத்து, பேறு, சென்றவன், இல்லாத, வேட்டுவன், சங்க, எட்டுத்தொகை, நல்வினை, யானை, குறும்பூழ், செய்யா