முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!
புறநானூறு - 208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்:
துறை: பரிசில்.
`குன்றும் மலையும் பலபின் ஒழிய, வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு` என நின்ற என்நயந்து அருளி, `ஈது கொண்டு, ஈங்கனம் செல்க, தான்` என என்னை யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்? |
5 |
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர் துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 206 | 207 | 208 | 209 | 210 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!, பரிசில், வாணிகப், இலக்கியங்கள், அல்லேன், பரிசிலன், புறநானூறு, வந்து, நான், அளவு, மலையும், எட்டுத்தொகை, சங்க, தினை