முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 197. நல் குரவு உள்ளுதும்!
புறநானூறு - 197. நல் குரவு உள்ளுதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக், கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ, உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு |
5 |
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ, மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே, இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த |
10 |
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு, புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின் பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே; மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
15 |
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்; நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 195 | 196 | 197 | 198 | 199 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 197. நல் குரவு உள்ளுதும்!, இலக்கியங்கள், உள்ளுதும், ஆயினும், புறநானூறு, குரவு, மன்னர், உணர்ச்சி, போல், முஞ்ஞைக், எனாஅ, எட்டுத்தொகை, சங்க, தானை, எம்மால்