முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 176. சாயல் நினைந்தே இரங்கும்!
புறநானூறு - 176. சாயல் நினைந்தே இரங்கும்!
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர் கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின், யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத் தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், இழுமென ஒலிக்கும் புனலம் புதவின், |
5 |
பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழி, யெற் புணர்ந்த பாலே! பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக், |
10 |
காணாது கழிந்த வைகல், காணா வழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன் கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 174 | 175 | 176 | 177 | 178 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 176. சாயல் நினைந்தே இரங்கும்!, சாயல், இலக்கியங்கள், இரங்கும், நினைந்தே, பனிச்சுனை, அவன், புறநானூறு, புலவர், பாரியின், நல்லியக்கோடன், இப்படி, அதற்காக, நான், நாட்டு, கிடைக்கும், அப்போது, பாரி, நல்லியக், ஓய்மான், சங்க, எட்டுத்தொகை, மகளிர், உழுத, நெஞ்சம், சீறியாழ், ஆம்பல், வள்ளல்