முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 174. அவலம் தீரத் தோன்றினாய்!
புறநானூறு - 174. அவலம் தீரத் தோன்றினாய்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.
ணை: வாகை.
துறை: அரச வாகை.
அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச், சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல் அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு, |
5 |
அர சிழந்து இருந்த அல்லற் காலை, முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப், பொய்யா நாவிற் கபிலன் பாடிய, |
10 |
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச் செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, அருவழி இருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை |
15 |
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந! விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண், சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன் ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், |
20 |
ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலந் தீர நீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்! கல்கண் பொடியக், கானம் வெம்ப மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக், |
25 |
கோடை நீடிய பைதறு காலை, இருநிலம் நெளிய ஈண்டி, உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 174. அவலம் தீரத் தோன்றினாய்!, இலக்கியங்கள், காலம், புறநானூறு, அவலம், பருதி, கபிலன், முள்ளூர், தீரத், தோன்றினாய், பாடிய, பொய்யா, கோடை, கொண்டது, திருக்கிள்ளி, மல்லல், பொறித்த, வளவன், உருவன், வாகை, மலையமான், சங்க, எட்டுத்தொகை, அவுணர், சிறப்பின், காலை, இருந்த, ஞாயிறு, காவிரி