முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 164. வளைத்தாயினும் கொள்வேன்!
புறநானூறு - 164. வளைத்தாயினும் கொள்வேன்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப் பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
குறிப்பு: தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது.
[பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)]
ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப், பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி, |
5 |
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, நிற்படர்ந் திசினே-நற்போர்க் குமண! என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய |
10 |
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ், மண்ணமை முழவின், வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 162 | 163 | 164 | 165 | 166 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 164. வளைத்தாயினும் கொள்வேன்!, இலக்கியங்கள், வளைத்தாயினும், பரிசில், நோக்கி, கொள்வேன், புறநானூறு, பால், நான், உன்னை, இல்லாமையால், குமணன், எட்டுத்தொகை, சங்க, கடாநிலை