முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 16. செவ்வானும் சுடுநெருப்பும்!
புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!
பாடியவர்: பாண்டரங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
திணை: வஞ்சி.
துறை; மழபுல வஞ்சி.
வினை மாட்சிய விரை புரவியொடு, மழை யுருவின தோல் பரப்பி, முனை முருங்கத் தலைச்சென்று, அவர் விளை வயல் கவர்பு ஊட்டி மனை மரம் விறகு ஆகக் |
5 |
கடி துறைநீர்க் களிறு படீஇ எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப், புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத், துணை வேண்டாச் செரு வென்றிப், |
10 |
புலவு வாள் புலர் சாந்தின் முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்! மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், பனிப் பகன்றைக், சுனிப் பாகல், கரும்பு அல்லது காடு அறியாப் |
15 |
பெருந் தண்பணை பாழ் ஆக, ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை, நாம நல்லமர் செய்ய, ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!, இலக்கியங்கள், செவ்வானும், அவர்களது, புறநானூறு, சுடுநெருப்பும், கரும்பு, மிக்க, எரிக்கும், கொண்டவன், பாகல், முருகன், சங்க, எட்டுத்தொகை, வஞ்சி, வாள், வள்ளை, ஆம்பல்