முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 15. எதனிற் சிறந்தாய்?
புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?
பாடியவர் :கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப், பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல், வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் |
5 |
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்; துளங்கு இயலாற், பணை எருத்தின், பா வடியாற்,செறல் நோக்கின், ஒளிறு மருப்பின் களிறு அவர காப் புடைய கயம் படியினை; |
10 |
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார், நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய, |
15 |
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில் நற் பனுவல் நால் வேதத்து அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, |
20 |
யூபம் நட்ட வியன்களம் பலகொல்? யாபல கொல்லோ? பெரும! வார் உற்று விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?, இலக்கியங்கள், சிறந்தாய், புறநானூறு, எதனிற், பாடும், பகைவர், பலரா, வேள்வி, பொன், எட்டுத்தொகை, சங்க, ஏந்தி