முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 143. யார்கொல் அளியள்!
புறநானூறு - 143. யார்கொல் அளியள்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
குறிப்பு: துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது.
மலைவான் கொள்க! என, உயர்பலி தூஉய், மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க! எனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள், பெயல்கண் மாறிய உவகையர், சாரல் புனைத்தினை அயிலும் நாட! சினப் போர்க் |
5 |
கைவள் ஈகைக் கடுமான் பேக! யார்கொல் அளியள் தானே; நெருநல், சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக், குணில்பாய் முரசின் இரங்கும் அருவி நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண். |
10 |
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, நின்னும்நின் மலையும் பாட, இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள். முலையகம் நனைப்ப, விம்மிக் குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே? |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 141 | 142 | 143 | 144 | 145 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 143. யார்கொல் அளியள்!, யார்கொல், அளியள், இலக்கியங்கள், நின்று, புறநானூறு, பேகன், குறவர், அருவி, எனக், கபிலர், எட்டுத்தொகை, சங்க, கண்ணகி, உயர்க