முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 137. நின்பெற்றோரும் வாழ்க!
புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!
பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.
இரங்கு முரசின், இனம் சால் யானை, முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே; நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது, |
5 |
கழைக் கரும்பின், ஒலிக்குந்து, கொண்டல் கொண்டநீர் கோடை காயினும், கண் ணன்ன மலர்பூக் குந்து, கருங்கால் வேங்கை மலரின், நாளும் பொன் னன்ன வீ சுமந்து, |
10 |
மணி யன்ன நீர் கடற் படரும்; செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந! சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை! நீவா ழியர் நின் தந்தை தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே! |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 135 | 136 | 137 | 138 | 139 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!, வாழ்க, இலக்கியங்கள், நின்பெற்றோரும், புறநானூறு, செவ்வரை, என்னும், ழியர், சங்க, எட்டுத்தொகை, நாஞ்சில்