புறநானூறு - 133. காணச் செல்க நீ!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.
மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது, காண்பறி யலையே; காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின் விரை வளர் கூந்தல் வரைவளி உளரக், கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, |
5 |
மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 131 | 132 | 133 | 134 | 135 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 133. காணச் செல்க நீ!, இலக்கியங்கள், காணச், புறநானூறு, செல்க, சங்க, எட்டுத்தொகை