முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 126. கபிலனும் யாமும்!
புறநானூறு - 126. கபிலனும் யாமும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக! வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும், வல்லே |
5 |
நின்வயிற் கிளக்குவம் ஆயின், கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின், பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருநர் தெறலரு மரபின் நின் கிளையொடும் பொலிய, நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம் |
10 |
புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன், இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப், பரந்து இசை நிறகப் பாடினன், அதற்கொண்டு சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப், |
15 |
பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை, இன்மை துரப்ப, அசை தர வந்து, நின் வண்மையின் தொடுத்தனம், யாமே; முள்ளெயிற்று அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப, அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
20 |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 124 | 125 | 126 | 127 | 128 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 126. கபிலனும் யாமும்!, பரிசில், இலக்கியங்கள், நான், நாவாய், குடகடலில், வானவன், யாமும், புறநானூறு, வேறு, கபிலனும், ஓட்டினான், ஓட்டியபோது, நின், வாடாத், சங்க, எட்டுத்தொகை, மலையமான், பொன், தாமரை, கொண்டு, ஆயினும்