புறநானூறு - 125. புகழால் ஒருவன்!
பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.
திணை: வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற்
கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர். பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை, பரூஉக் கண் மண்டை யொடு, ஊழ்மாறு பெயர |
5 |
உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே, நள் ளாதார் மிடல் சாய்ந்த வல்லாள ! நின் மகிழிருக் கையே உழுத நோன் பகடு அழிதின் றாங்கு நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே; |
10 |
குன்றத் தன்ன களிறு பெயரக், கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே; வெலீஇயோன் இவன் எனக் கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு விரைந்து வந்து, சமந் தாங்கிய, |
15 |
வல்வேல் மலையன் அல்லன் ஆயின் நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத், தோற்றோன் தானும், நிற்கூ றும்மே, தொலைஇயோன் அவன் என, ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு |
20 |
இருக்கை சான்ற உயர் மலைத் திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 125. புகழால் ஒருவன்!, இலக்கியங்கள், புகழால், நிற், மலையன், ஒருவன், புறநானூறு, பேசுகிறான், அவன், சிறப்பாகப், உழுத, சோழன், எட்டுத்தொகை, வாகை, சங்க