புறநானூறு - 117. தந்தை நாடு!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், வயல்அகம் நிறையப், புதற்பூ மலர, மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண் ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், |
5 |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப், பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே; பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 117. தந்தை நாடு!, முல்லை, தந்தை, இலக்கியங்கள், நாடு, தோன்றல், சான்றோர், புறநானூறு, சீற்றங்கள், காரணம், ஆட்சி, இயற்கைச், வெள்ளி, எட்டுத்தொகை, சங்க, தூமம், முள்