முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 113. பறம்பு கண்டு புலம்பல்!
புறநானூறு - 113. பறம்பு கண்டு புலம்பல்!
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி, நட்டனை மன்னோ, முன்னே; இனியே, பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று, |
5 |
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே! கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர் நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 111 | 112 | 113 | 114 | 115 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 113. பறம்பு கண்டு புலம்பல்!, இலக்கியங்கள், பறம்பு, புறநானூறு, கண்டு, புலம்பல், பாரி, தொழுது, எட்டுத்தொகை, சங்க, நட்புக்