முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 11. பெற்றனர்! பெற்றிலேன்!
புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.
பாடப்பட்டோன் : சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாடாண்.
துறை :பரிசில் கடாநிலை.
அரி மயிர்த் திரள் முன்கை வால் இழை, மட மங்கையர் வரி மணற் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து தண் பொருநைப் புனல் பாயும் |
5 |
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப் பாடல் சான்ற விறல்வேந் தனும்மே வெப் புடைய அரண் கடந்து, துப்புறுவர் புறம்பெற் றிசினே: புறம் பொற்ற வய வேந்தன் |
10 |
மறம் பாடிய பாடினி யும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே! இழை பெற்ற பாடி னிக்குக் குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே. |
15 |
என ஆங்கு, ஒள்அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!, உடைய, இலக்கியங்கள், பாடிய, பெற்றனர், பெற்றிலேன், இவன், புறநானூறு, வஞ்சி, நாரால், நகரம், விளையாடுவர், பரிசாக, வெள்ளி, வழங்கினான், பொருநை, பாடினி, பாலை, சங்க, எட்டுத்தொகை, பெருங்கடுங்கோ, பாயும், பெற்ற, வேந்தன், றிசினே, குரல்