பதிற்றுப்பத்து - பதிகம்
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன், நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி, வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, |
5 |
ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து, புரோசு மயக்கி, |
10 |
மல்லல் உள்ளமோடு மாசு அற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு. |
அவைதாம்: புலா அம் பாசறை, வரைபோல்
இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ்
பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல்
அருவி; இவை பாட்டின் பதிகம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஈன்ற