பதிற்றுப்பத்து - பதிகம்
குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள் ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன் தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, |
5 |
வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி, ஏனை மழவரைச் செருவில் சுருக்கி, மன்னரை ஓட்டி, குழவி கொள்வாரின் குடி புறந்தந்து, நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் |
10 |
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடினார் பத்துப் பாட்டு. |
அவை தாம்: வடு அடு நுண் அயிர்,
சிறு செங் குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர்,
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு தடக் கை, மா
கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை பாட்டின் பதிகம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -