பதிற்றுப்பத்து - பதிகம்
மன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி, இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்- அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து, இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி, நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து, நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ, அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி, அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்- இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு. |
அவைதாம்: புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல்
புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில்
இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு
பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -