முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » (பதிற்றுப்பத்தில் விட்டுப்போனவைகள்)
பதிற்றுப்பத்து - (பதிற்றுப்பத்தில் விட்டுப்போனவைகள்)
1
இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து, பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர் வணங்கார் ஆதல் யாவதோ மற்றே- உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக் கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு, |
5 |
கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து, நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி நீர்துனைந்தன்ன செலவின், நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே? |
10 |
[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ.
6, இளம்பூரணர் மேற்கோள்; சூ. 8,
நச்சினார்க்கினியர் மேற்கோள்]
2
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்; எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி, கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி; கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு |
5 |
ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து, அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்- கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக் கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப, கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப, |
10 |
நெடு மதில், நிரை ஞாயில், கடி மிளை, குண்டு கிடங்கின், மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம் நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ, ஒல்லா மன்னர் நடுங்க, |
15 |
நல்ல மன்ற-இவண் வீங்கிய செலவே! |
[தொல். புறத்திணை. சூ.
12,25 நச்சினார்க்கினியர்
மேற்கோள்]
3
வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே- களிறு கலிமான் தேரொடு சுரந்து, நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை, மாரி என்னாய் பனி என மடியாய் பகை வெம்மையின் அசையா ஊக்கலை; |
5 |
வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு மாறா மைந்தர் மாறு நிலை தேய, மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து, கடாஅ யானை முழங்கும், இடாஅ ஏணி நின் பாசறையானே. |
10 |
[புறத்திரட்டு, பாசறை. 8]
4
பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் என்னொடு புரையுநளல்லள், தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே. |
[தொல். கற்பு. சூ.
39, நச்சினார்க்கினியர்
மேற்கோள்.]
5
'விசையம் தப்பிய .... .... என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.' |
[தொல். புறத்திணை சூ.
20, நச்சினார்க்கினியர்
மேற்கோள்.]
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்