முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும்
எடுத்துக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நலம் பெறு திருமணி
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது, வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப; சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல், வேறு படு திருவின் நின் வழி வாழியர், கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், |
5 |
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி, தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி, கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின், புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் |
10 |
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டிற் பருதி போகிய புடை கிளை கட்டி, எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன் சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, |
15 |
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள், ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில் எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற்கு அமைந்த அரசு துறை போகிய |
20 |
வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு- அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!- அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின் முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை, 'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், |
25 |
தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என, வேறு படு நனந் தலைப் பெயரக் கூறினை, பெரும! நின் படிமையானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், அருங், விடு, போகிய, வேறு, கடுக்கும், வண்ணம், நலம், பெறு, துறை