முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச்
சிறப்பும்
பதிற்றுப்பத்து - 72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உருத்து எழு வெள்ளம்
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார், சூழாது துணிதல் அல்லது, வறிது உடன் காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின் முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து, மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் |
5 |
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின் பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்; துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை, நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி, உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் |
10 |
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து, ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து, பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின் மடங்கல் தீயின் அனையை, |
15 |
சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், பெருமையின், வெள்ளம், உருத்து, வண்ணம்