முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி
வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்
பதிற்றுப்பத்து - 69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : மண் கெழு ஞாலம்
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி, வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க, கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம் கால் உறு கடலின் கடிய உரற, எறிந்து சிதைந்த வாள், |
5 |
இலை தெரிந்த வேல், பாய்ந்து ஆய்ந்த மா, ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு படுபிணம் பிறங்க நூறி, பகைவர் கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!- |
10 |
நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாது ஆண்டோ ர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்- நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய, பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர, |
15 |
நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த, இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கெழு, தெரிந்த, பயம், வயின், ஞாலம், வண்ணமும், குடி