முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச்
சிறப்புக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புதல் சூழ் பறவை
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி, படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, |
5 |
கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து, தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், |
10 |
நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின், தார் புரிந்தன்ன வாளுடை விழவின், போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, |
15 |
பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும், வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின், இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விரிந்து, தார், இலங்கு, குழூஉச், பறவை, புதல், சூழ், வண்ணம்