முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச்
சிறப்புக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை
'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல் வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல், ஓவத்து அன்ன வினை புனை நல் இல், பாவை அன்ன நல்லோள் கணவன், பொன்னின் அன்ன பூவின், சிறியிலை, |
5 |
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ, புலர்ந்த சாந்தின், புலரா ஈகை, மலர்ந்த மார்பின், மா வண் பாரி முழவு மண் புலர, இரவலர் இனைய, வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என, |
10 |
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்; 'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின் நல் இசை தர வந்திசினே-ஒளி வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, |
15 |
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி முழவில் போக்கிய வெளி கை விழவின் அன்ன, நின் கலி மகிழானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, நின், வெளி, ஈத்தொறும், வண்ணம், பாசறை, புலாஅம்