முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 49. மன்னவனது வரையா ஈகை
பதிற்றுப்பத்து - 49. மன்னவனது வரையா ஈகை
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : செங் கை மறவர்
யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்! கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!- களிறு பரந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; |
5 |
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார், வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து, மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி, நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர் |
10 |
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி, மழை நாட் புனலின் அவல் பரந்து ஒழுக, படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து, படு கண் முரசம் நடுவண் சிலைப்ப, வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட, |
15 |
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த பெருஞ் சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பரந்து, மறவர், செங், வண்ணம்