முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்
துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பேர் எழில் வாழ்க்கை
பைம் பொற் தாமரை பாணர்ச் சூட்டி, ஒளி நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி, கெடல் அரும் பல் புகழ் நிலைஇ, நீர் புக்கு, கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ! 'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் |
5 |
கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன், எனத் தத்தம் கை வல் இளையர் நேர் கை நிரைப்ப, வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, முனை சுடு கனை எரி எரித்தலின், பெரிதும் |
10 |
இதழ் கவின் அழிந்த மாலையொடு, சாந்து புலர் பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ- நின் மலைப் பிறந்து, நின் கடல் மண்டும் மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின், பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை, |
15 |
மேவரு சுற்றமோடு உண்டு, இனிது நுகரும், தீம் புனல், ஆயம் ஆடும், காஞ்சிஅம் பெருந் துறை மணலினும் பலவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், நீர், புனல், தீம், வாழ்க்கை, எழில், வண்ணம், பெயர், பேர், துறை