முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
பதிற்றுப்பத்து - 39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
துறை : வாகை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏவல் வியன் பணை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே, எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர்- துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை, கறுத்த தெவ்வர் கடி முனை அலற, எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை |
5 |
உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு, அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும், காலன் அனைய, கடுஞ் சின முன்ப! வாலிதின், நூலின் இழையா நுண் மயிர் இழைய- பொறித்த போலும் புள்ளி எருத்தின் |
10 |
புன் புறப் புறவின் கண நிரை அலற, அலந்தலை வேலத்து உலவைஅம் சினை சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின், இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச் |
15 |
சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், வியன், ஏவல், வண்ணம், சிறப்பும்