முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி,
அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்
பதிற்றுப்பத்து - 32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கழை அமல் கழனி
மாண்டனை பலவே, போர் மிகு குருசில்! நீ மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்; முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற, மிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று, துப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப, |
5 |
ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்; எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந. கொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ!- நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, |
10 |
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து, தடந் தாள் நாரை படிந்து இரை கவரும், முடந்தை நெல்லின் கழை அமல், கழனி, பிழையா விளையுள் நாடு அகப்படுத்து, வையா மாலையர் வசையுநர்க் கறுத்த |
15 |
பகைவர் தேஎத்து ஆயினும்- சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கழனி, அமல், வண்ணம்