முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 22. வென்றிச் சிறப்பு
பதிற்றுப்பத்து - 22. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : கயிறு குறு முகவை
சினனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்: தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து, |
5 |
கடலும் கானமும் பல பயம் உதவ; பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது, மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள் மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய; |
10 |
ஊழி உய்த்த உரவோர் உம்பல்! பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச் சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல், கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த, |
15 |
வேல் கெழு தானை, வெருவரு தோன்றல்! உளைப் பொலிந்த மா, இழைப் பொலிந்த களிறு, வம்பு பரந்த தேர், அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு, |
20 |
துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை, ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி, கடி மிளைக் குண்டு கிடங்கின், நெடு மதில் நிரைப் பதணத்து, |
25 |
அண்ணல்அம் பெருங் கோட்டு அகப்பா எறிந்த, பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ! போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும், நீர்த்தரு பூசலின் அம்பு அழிக்குநரும், ஒலித் தலை விழவின் மலியும் யாணர் |
30 |
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின், குட திசை மாய்ந்து, குண முதல் தோன்றி, பாய் இருள் அகற்றும், பயம் கெழு பண்பின், ஞாயிறு கோடா நன் பகல் அமையத்து, கவலை வெண் நரி கூஉம் முறை பயிற்றி, |
35 |
கழல்கண் கூகைக் குழறு குரற் பாணிக் கருங் கட் பேய்மகள் வழங்கும் பெரும் பாழ் ஆகும்மன்; அளிய, தாமே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கெழு, பொன், நாடு, பொலிந்த, எறிந்த, பிணி, பிறர், கயிறு, குறு, முகவை, பயம், வண்ணமும்