முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக்
கூறுதல்
பதிற்றுப்பத்து - 17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம்படு வியன் பணை
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே- பெரிய தப்புநர் ஆயினும், பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்- துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி, கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, |
5 |
ஆடுநர் பெயர்ந்து
வந்து, அரும் பலி தூஉய், கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர், 'அரணம் காணாது, மாதிரம் துழைஇய நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என, ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின், |
10 |
அமிழ்து திகழ் கருவிய கண
மழை தலைஇ, கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின், விசும்பு தோய் வெண்குடை நுவலும் பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வியன், வலம்படு, வண்ணம்