முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி
வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சான்றோர் மெய்ம்மறை
நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின் அளப்பு அரியையே; நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல், ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு |
5 |
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை, அக்குரன் அனைய கைவண்மையையே; அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப! கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே; |
10 |
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை! வான் உறை மகளிர், நலன், இகல் கொள்ளும்; வயங்கு இழை கரந்த, வண்டு படு கதுப்பின்; ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ! |
15 |
பல் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படை ஏர் உழவ! பாடினி வேந்தே! இலங்குமணி மிடைந்த பொலங் கலத் திகிரிக் கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின் முன் திணை முதல்வர் போல, நின்று நீ |
20 |
கெடாஅ நல் இசை நிலைஇத் தவாஅலியரோ, இவ் உலகமோடு உடனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போர், மெய்ம்மறை, சான்றோர், வண்ணமும், ஒருங்கு